அண்மையில் யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு நபரிடம் பேச வேண்டும் என்று எனக்கு ஏனோ தோன்றியது. அவரிடம் பேச்சைத் தொடங்கினேன்.
"வணக்கம் ஐயா, நீங்கள் யார் என்று அறிமுகம் செய்ய முடியுமா?"
"நான் செந்தமிழ் ஆகமம் மடத்தின் 'மனேஜர்..' "
அவர் 'மனேஜர்' என்று சொன்னதும், அவர்கள் தமிழ் பற்றாளர் வேடம் தரிக்கும் நோக்கம் புரிந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல்
"சரி ஐயா உங்கள் மடத்தில் இப்போது எத்தனை பேர் இருந்து கல்வி கற்கிறார்கள்?"
"இப்ப ஒருத்தரும் இல்லை, இப்பதான் கோல் பண்ணியிருக்கிறம், ஆக்கள் சேர்ந்தால் தொடங்குவம்."
"அதுசரி ஐயா, செந்தமிழ் ஆகமம் என்றால் என்ன, அப்படி யாராவது புதிதாக செந்தமிழ் ஆகமம் என்று எழுதியிருக்கிறார்களா? யார் எழுதியது?"
"அப்படி புதிதாக யாரும் எழுதவில்லை"
"அப்படி என்றால் பழைய சமஸ்கிருத ஆகமங்கள் எதையாவது தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறீர்களா? எந்த ஆகமத்தை மொழிமாற்றம் செய்தீர்கள்?"
"இல்லை, அப்படி எதுவும் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.
"அப்படியென்றால் செந்தமிழ் ஆகமம் என்று என்னதான் செய்கிறீர்கள்."
"தமிழில் பூசை செய்வது.."
"தமிழில் மந்திரங்கள் எதையாவது உருவாக்கி இருக்கிறீர்களா?"
"இல்லை, நாங்கள் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் என்பவற்றை மந்திரமாக கொண்டு பூசை செய்கிறோம்."
"தேவாரத்தை தேவாரமாக பார்க்காமல் எதற்காக மந்திரமாக பார்க்கிறீர்கள்? தேவனுக்கு சூட்டும் ஆரம் என்பதாக பாமாலை எனும் பொருளில் வரும் சமஸ்கிருத சொல்லல்லவா தேவாரம் என்பது. மந்திரம் என்பதும் சமஸ்கிருதம் தானே? உண்மையில் தமிழ் மந்திரங்கள் என்றால் இன்றும் மட்டக்களப்பு, வன்னி போன்ற பகுதிகளில் பாரம்பரிய தமிழ் மந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த கிராமிய பூசை முறைகளை ஊக்குவிப்பது தானே முறை, பிராமணர்களின் சமஸ்கிருத பூசைமுறையில் மந்திரத்தை மாற்றி தேவாரத்தை இடுவதால் என்ன பயன்.?"
அவரால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை, "மந்திரம் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டு திசை திருப்ப பார்த்தார்..
நான் "நீங்களே சொல்லுங்கள், மந்திரம் என்றால் உங்கள் பார்வை என்ன?" என்று அவரிடமே கேள்வியை திருப்பி விட்டேன்.
அவர் அதற்கும் பதில் சொல்லாமல் அவர் சம்பந்தமே இல்லாமல் பேச்சை திசைதிருப்பினார்.
வழக்கமாக மிஷனரி பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள் கையாளும் யுக்தி அது..
நான் வேறு வேலை இருந்ததால் அவருடன் பேசிப் பயனில்லை என்று கிளம்பிவிட்டேன்.
"செந்தமிழ் ஆகமம்" என்று ஒன்று கிடையாது. ஆகமம் என்று ஒன்று இல்லாமல் எந்த விதிமுறைகளின்படி இவர்கள் ஆலய பூசைகள், கிரியைகளை செய்ய முற்படுகிறார்கள்.
தமிழில் பூசை செய்வது என்றால் தமிழ் பூசைமுறை என்று சொல்லாமல் ஏன் செந்தமிழ் ஆகமம் என்று சொல்கிறார்கள்?
கிறிஸ்தவர்கள் தமது பைபிளை வேதாகமம் என்று சொல்வதும், ஆகமம் என்று எதுவுமில்லாமல் செந்தமிழ் ஆகமம் என்று உருட்டுவதும் ஒரே வழிமுறைதான். ஒரே நோக்கம்தான். ஒரே கூட்டம்தான்.
இந்துக்களின் நம்பிக்கைகள் மீது குழப்பத்தை ஏற்படுத்துவதும், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதுமே அவர்களின் நோக்கம்.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக