உயிர்களைப் போலவே கடவுளுக்கும் பந்த பாசம் இருக்கும், அடுத்தவர் பிரச்சினைகளை கண்டு இரங்கும், ஆபத்தில் வந்து உதவும், அடுத்தவர் கர்மங்களுக்கு வந்து உதவும் என்றால் உயிருக்கும் அந்த கடவுளுக்கும் என்ன வேறுபாடு? கடவுளுக்கும் பிறப்பு இறப்பு உண்டு, கடவுளுக்கு பிரதிநிதிகள் தூதர்கள் உண்டு என்றால் கடவுளுக்கும் உயிர்களுக்கும் என்ன வேறுபாடு?
இரண்டு பொருட்களை வேறுபடுத்திக் காட்டுவது அவற்றின் இயல்பு வேறுபாடும் குண வேறுபாடும் தானே? இரண்டு பொருட்களுக்கும் ஒரே இயல்பு ஒரே குணம் என்றால் அவை இரண்டும் வேறு வேறு பொருள் கிடையாது அல்லவா?
எனவே பிறந்தது இறந்தது என்பது கடவுளில்லை. அது ஒரு உயிர் மட்டுமே. உயிர்கள் செய்யும் கர்மங்களுக்கு உதவும், உயிர்கள் செய்யும் கர்மங்களில் தலையீடு செய்யும் என்றால் அது கடவுள் கிடையாது. அது ஒரு உயிர் மட்டுமே.
உலகில் சித்தாந்த முடிபு கூறும் சிவத்தை தவிர வேறு எதுவும் கடவுள் வழிபாடு கிடையாது. சிவம் மட்டுமே உண்மையான ஒரே கடவுள். மற்றவை அனைத்தும் உயிர் வகைகளை வணங்கும் வழிபாடுகள் மட்டுமே.
பிறந்தார் இறந்தார் உயிர்த்தார் படைத்தார் காத்தார் என்று கூறுபவை அனைத்தும் உயிர்களைப் பற்றியே அன்றி கடவுளைப் பற்றி கிடையாது. அவ்வாறு கூறுபவர்கள் யாரும் கடவுளைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாதவர்கள்.
உயிர்களை வழிபடுவதை விடுத்து உண்மையான ஒரே கடவுளான சிவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு போலியான ஆண்டவர்களை வழிபட்டு ஆன்ம ஈடேற்றத்தை தள்ளிப் போட போகிறீர்கள்?
உண்மையான ஒரே கடவுள் சிவம் மட்டுமே...

.jpeg)
Read User's Comments 


